மாரடைப்பால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோகதாரலிங்கம் மாரடைப்பு காரணமாக நேற்று புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மாரடைப்பு காரணமாக நேற்று புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மாஞ்சோலை வைத்தியசாலையிலிருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக தெரியவந்துள்ளது. தற்போது உடல்நிலை தேறி வருவதாகவும், வைத்தியரின் ஆலோசனைக்கு அமைவாக வைத்தியசாலையில் தங்கி இருப்பதாகவும் தெரியவருகிறது.